வியாழன், 5 பிப்ரவரி, 2015

                           கோவில்களில் புதைந்திருக்கும் மர்மங்கள்!!



பல்வேறு இனங்கள், சமயங்கள், மதங்கள் இணைந்த நாடு தான் இந்தியா.
இங்கு ஒவ்வொரு மாநிலங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் இனத்திற்கு ஏற்றவாறு கோயில்களை கட்டி வழிபட்டு வருகின்றனர்.
ஆனால் இந்தியாவில் லட்சக்கணக்கான கோயில்கள் இருந்தாலும், அவை எந்த அமைப்பில் அல்லது எந்த வழியில் கட்டப்பட்டுள்ளன என்று பார்த்தால் அவை ஒரு அதிசயமே,
கோவில்கள் பூமியின் காந்த அலை எங்கு அடர்த்தியாக ஓடுகிறதோ அங்கு கட்டப்பட வேண்டும், அது கிராமமாகவோ, நகரமாகவோ, மலை என எங்கு வேண்டுமானாலும் கட்டலாம்.
மேலும், கடவுள் இருக்குமிடமான மூலஸ்தானத்தில் சிலையை வைத்த பிறகே கோவிலின் அமைப்பு கட்டப்படும், இந்த இடத்தில் தாமிரத் தகடுகள் வேத வரிகளைச் செதுக்கி புதைக்கப்படும்,
ஏனெனில் காந்த அலைகளை அது சுற்றிம் பரப்பும், ஒருவர் தொடர்ந்து கோவிலுக்கு சென்று சிலையை வலப்புறமாக சுற்றி வந்தால் அவர் பூமியின் காந்த ஆற்றலைப் பெறுவார், அவரின் உடல் அந்த ஆற்றலை கிரகித்துக் கொள்ளும், இவ்வாற்றல் அவர் நலமுடன் வாழ வழி வகுக்கும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை,
கர்ப்பக்கிரகம் மூன்று திசையில் மூடப்பட்டுள்ளதால் ஆற்றலை அதிகப்படுத்தும், மூலஸ்தானத்திலிருந்து விளக்கும் வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும், மணியோசை பக்தர்களின் மனதினை அலைபாய விடாமல் ஒன்றியிருக்கச் செய்யும், இது மன அழுத்தத்தினைக் குறைக்கும்,
மேலும், கடவுளின் சிலைகளை கற்பூரம், துளசி மற்றும் பிற பொருள்களை சேர்த்து கழுவி அந்த நீரை தீர்த்தமாக்குவார்கள். அதில் மிக அதிகமான காந்த சக்தியுள்ளது.
அத்தீர்த்தத்தினை தாமிரப் பாத்திரத்திலிட்டுத் தருவார்கள், இது பற்சொத்தை மற்றும் சளி, இருமல் போன்றவற்றினை போக்கவல்லது,
மேலும் தீபாரதனை காட்டும் போது மிக அதிகமான சக்தி வெளிப்படும், எனவே தான் ஆண்களை சட்டையில்லாமலும் பெண்களை அதிக அணிகலன்களோடும் கோவிலுக்கு வரச் சொன்னார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக