வியாழன், 1 மார்ச், 2012

தமிழக மக்களை ஏமாற்றும் உதயகுமார்


கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு  எதிராக போராடி வரும் போராட்ட குழுவினர் நேற்று தமிழக முதல்வர் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்கள் .  முதல்வருடனான கூட்டத்தை முடித்து திரும்பிய திரு . உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது , கூடங்குளம் அணுமின் நிலையத்தை எரிவாயுவால் இயக்க முடியும் என்றும் , இது போல உலகத்தில் ஏற்க்கனவே நிகழ்ந்து இருப்பதாக 3 மின் நிலையங்களின் பெயரையும் குறிப்பிட்டார் .  இந்த தகவலை ஆராய்ந்து பார்த்தால் , திரு . உதயகுமார் அறிந்தோ / அறியாமலோ தமிழக மக்களையும் , தமிழக முதல்வரையும் ஏமாற்றும் தகவலை சொல்லி உள்ளார் என்பது புலனாகிறது ..
.
இந்த சம்பவங்கள் குறித்து நான் பல பதிவுகள் ஏற்கனவே எழுதி இருந்தாலும் ,  சில பதிவுலக நண்பர்களும் இதை வலியுறுத்தி எழுதுவதால் , இது குறித்து மிகவும் விளக்கமாக எழுத ஆசைப்பட்டதே இந்த பதிவு . பொறுமையுடன் படியுங்கள் .... கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் .

செய்தியாளர்களிடம் திரு . உதயகுமார் பேசும் பொழுது கீழ்க்கண்ட மூன்று அணுமின்  நிலையங்கள் Gas மற்றும் நிலக்கரி  மூலம் இயங்கும் மின் நிலையங்களாக மாற்றப்பட்டு இருப்பதாக கூறினார் . 
  1. அமெரிக்காவில் உள்ள ஷோர்ஹாம் அணுமின் நிலையம்
  2. ஓஹியோ மாகாணம் , மாஸ்கோ என்னும் இடத்தில உள்ள வில்லியம் ஹெச். ஜிம்மர் மின்திட்டம்
  3. மிக்சிகன் மாகாணம் , மிட்லேன்ட் அணுமின் நிலையம்
  எனவே இவற்றின் உண்மை பின்னணி குறித்து விளக்கமாக நாம் காண்போம் .

 அமெரிக்காவில் உள்ள ஷோர்ஹாம் அணுமின் நிலையம் .
ஏப்ரல் 13 , 1965 ம ஆண்டு இந்த மின்திட்டம் துவக்கத்தை குறித்து LILCO ( Long Island Lighting Company ) நிறுவனத்தின் தலைவர் தங்கள் நிறுவனத்தின் பங்குதாரர் கூட்டத்தில் அறிவித்தார் .  அதன் படி நியூயார்க் அருகில் உள்ள ஷோர்ஹாம் என்ற இடத்தில 1973 ம வருடம் தொடங்கப்பட்டு 1984 ம வருடம் கட்டி முடிக்கப்பட்டது  


3 mile தீவு விபத்திற்கு பிறகு , இந்த பகுதி மக்கள் அணுமின் நிலயத்திற்கு எதிராக போராடினார்கள் என்பது உண்மை தான் .  ஆனால் அணுமின் நிலையம் மூடப்படத்தின் உணமையான காரணம் பின்வருமாறு  :

  1. இந்த அணுமின் நிலையத்தின் கட்டுமானம் Nuclear Regulatory Commission and the Atomic Energy Commission போன்றவற்றின் விதிகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை . அதனால் இந்த அணுமின் நிலயத்தின் கட்டுமான தரம் கேள்விக்குறியானது ..... தகவலுக்கு : http://www.eoearth.org/article/Shoreham_Nuclear_Power_Plant 
  2. இந்த அணுமின் நிலையம் அரசால் நேரடியாக கட்டப்படவில்லை . ஒரு தனியார் நிறுவனத்தால் ( தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Long_Island_Lighting_Company ) கட்டப்பட்டது . மேலும் இந்த நிறுவனம் தயாரித்த அவசர கால திட்டம் அரசால் ஏற்றுகொள்ள முடியாததால் இந்த மின் நிலையத்தின் செயல்பாடு அரசால் நிறுத்தப்பட்டது .

 மாத்திரமல்ல இந்த அணுமின் நிலையம் தனியாரால் கட்டப்பட்டதால் ,  இந்த அணுமின் நிலையத்தின் உபகரனகள் ( Turbine  ) போன்றவை வேறு ஒரு அணுமின் நிலையத்தில் ( Davis-Besse Nuclear Power Station ) பயன்படுத்தப்பட்டது . அதாவது அணுமின் நிலையத்தை அப்படியே Gas Fired power station ஆக மாற்றமுடியாது என்பது விளங்குகிறது அல்லவா .... தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு காரணிகளை மேற்கொள்ளாத காரணத்தினால் தான் அந்த அணுமின் நிலையம் மூடப்பட்டது . தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Shoreham_Nuclear_Power_Plant



அணுமின் நிலையத்தின் Power Transmission system மாத்திரம் அப்படியே வைக்கப்பட்டு 2002 ம ஆண்டில் 100 MWe மின்சாரம் தயாரிக்கும் Gas Fired மின் நிலையம் புதிதாக அமைக்கப்பட்டது .  ஏற்கனவே அமைக்கப்பட்ட அணுமின் நிலைய உணகரனங்களை நீக்குவதற்கும் , புதிய Gas Fired மின் நிலையம் அமைப்பதற்கும் 186 மில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டது .  தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Shoreham_Nuclear_Power_Plant

 ஓஹியோ மாகாணம் , மாஸ்கோ என்னும் இடத்தில உள்ள வில்லியம் ஹெச். ஜிம்மர் மின்திட்டம் 

  சின்சினாட்டி gas  & electric நிறுவனத்தால் Ohio மாகாணத்தில் உள்ள மாஸ்கோ என்ற இடத்தில 230 மில்லியன் டாலர் செலவில் அணுமின் நிலையம் கட்டப்பட ஆரம்பித்தது .  இந்த அணுமின் நிலைய திட்டம் 1983 ம வருடம் கைவிடப்பட்டு கூடுதலாக 100 மில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டு கிட்டதட்ட 3 . 4 பில்லியன் டாலர் செலவில் ( 1984 ம வருட கணக்கின் படி ) அனல் மின் நிலையமாக மாற்றப்பட்டது .  ஏன் அப்படி செய்யப்பட்டது என்பதை நாம் காணலாம்





97 சதவீதம் கட்டி முடிக்கப்பட்ட அணுமின் நிலையத்தின் முக்கிய Pipe line யை சோதித்து பார்க்கும் பொழுது மிக மோசமான தரத்துடன் அமைக்கப்பட்டு இருந்ததால் Nuclear Regulatory Commision 2 லட்சம் டாலர் அபராதத்தை சின்சினாட்டி gas  & electric நிறுவனத்தின் மீது விதித்தது .  மேலும் இந்த தனியார் நிறுவனம் முதல் முதலாக அணுமின் நிலையத்தை கட்டியபடியால்  ,  தரம் குறைந்த உபகரனகளையும் , தரம் குறைந்த கட்டுமானத்தையும் கொண்டு இருந்த படியால் , அணுமின் நிலையம் திட்டம் கைவிடப்பட்டது .  இந்த அணுமின் நிலையத்தை அனல் மின் நிலையமாக மாற்ற அணுமின் நிலையத்திற்கு அமைக்கப்பட்ட Cooling tower தவிர மற்ற அனைத்தும் புதிதாக மாற்றப்பட்டது . தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/William_H._Zimmer_Power_Station


 மிக்சிகன் மாகாணம் , மிட்லேன்ட் அணுமின் நிலையம் 

Midland Cogeneration Venture என்ற நிறுவனத்தால் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த அணுமின் நிலையம் ஏன் Gas fired மின் நிலையமாக மாற்றப்பட்டு என்று நாம் பார்த்தால் , அந்த கட்டுமானம் மோசமான தரத்தினால் கட்டப்பட்டது மற்றும் அதன் தரைபகுதி மூழ்கவும் ( கட்டுமானத்தில் இருக்கும் போதே ) தொடங்கி விட்டது .  தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Midland_Cogeneration_Venture . அணுமின் நிலையம் கட்டுவதற்கு செலவழிக்கப் பட்டதை போல இரு மடங்கு செலவழிக்கப்பட்டு ( 500 மில்லியன் டாலர் ) , இந்த அணுமின் நிலையம் , Gas fired மின் நிலையம் ஆகா மாற்றப்பட்டது . தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Midland_Cogeneration_Venture





மேற்க்கண்ட சம்பவங்களை நாம் பார்க்கும் பொழுது , நாம் கவனிக்கவேண்டிய சில விடயங்கள் உள்ளது . அவை .....

  1. மேற்கண்ட அணுமின் நிலையனகள் அனைத்தும் தனியார் கட்டியது .  ஆனால இந்திய அணுமின் நிலயங்கள் அனைத்தும் இந்திய அணுசக்தி கழகத்தால் கட்டப்படுகிறது .
  2. மேற்கண்ட அனைத்து அணுமின் நிலையங்களின் கட்டுமானம் அனைத்தும் தரமற்றவை மற்றும் பாதுகாப்பற்றவை ஆக இருந்ததினால் தான் அவைகள் மாற்றப்பட்டது .  தரமான , மற்றும் பாதுகாப்பான மற்ற அணுமின் நிலையங்கள் ஏன் மாற்றப்படவில்லை ....?  கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு காரணிகள் மத்திய , மாநில குழு வல்லுனர்களால் சான்றளிக்கப்பட்டு இருக்க திரு . உதயகுமார் இப்படி கேட்பது எதற்கோ ...?
  3. மேற்கண்ட மூன்று அணுமின் நிலையங்களும் வேறு நிலையங்களாக மாற்றப்படுவதற்கு ஏறத்தாழ இரு மடங்கு செலவு செய்யப்பட்டுள்ளது . அதாவது அந்த தொழில்நுட்பம் முழுவதும் மாற்றப்பட்டுள்ளது .  ஆனால் திரு . உதயகுமார் அணுமின் நிலையத்தை அப்படியே Gas Fired powed Station ஆக மாற்றமுடியும் என்று எப்படி சொல்லுகிறார் ...?
  4. மேற்கண்ட விடயங்கள் முழுவதும் திரு . உதயகுமாருக்கு தெரியாதா ...? அல்லது வேண்டும் என்றே மக்களை குழப்புகிறாரா ....? முதல்வரையும்  சேர்த்து ...
  5. சமையலுக்கே எரிவாயு ஒழுங்காக கிடைக்காத இந்த சமயத்தில் அண்ணாச்சி உதயகுமார் எரிவாயுவை எங்கிருந்து கொண்டுவருவார் என்பதும் விளங்காத காரியம் தானே ....!

இவைகளை கவனித்து பார்க்கும் பொழுது திரு . உதயகுமார் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும்  முட்டாள்கள் என்று நினைத்து விட்டார் என்றே தோன்றுகிறது ...... தமிழர்கள் முட்டாள்கள் அல்ல என்பதை திரு . உதயகுமார் உணரும் நாள் வரை நானும் காத்திருக்கிறேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக