செவ்வாய், 27 மார்ச், 2012

போராட்டக்குழுவினர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர்.


கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக உதயகுமார் தலைமையில் போராட்டம் நடந்து வந்தது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய மாநில அரசுகள் குழுக்கள் அமைத்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து நடந்தது. இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உடனடியாக பணிகளை தொடங்கலாம் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ராதாபுரம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் உதயகுமார் தலைமையில் சிலர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக உதயகுமார் கூறினார். இன்று தமிழக அரசும் பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தது.

இதனையடுத்து ராதாபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட பரமேஸ்வரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சவார்த்தையில், நெல்லை கலெக்டர் செல்வராஜ், நெல்லை டி.ஐ.ஜி.,வரதராஜூ, எஸ்.பி., விஜயேந்திர பிதாரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். போராட்டக்குழுவினர் சார்பில், மதுரை மாவட்ட ஆயர் பீட்டர் பெர்ணாண்டோ, அரிமாவளவன், ஜெயசீலன், சுந்தரி, சாரதி உள்ளிட்ட 15 பேர் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் ராதாபுரம் பகுதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்றும், வழக்குகள் வாபஸ் பெற வேண்டும் என போராட்டக்குழுவினர் கோரிக்கை விடுத்தனர். கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் மட்டும் 144 தடை உத்தரவு தொடரும் என்றும், ராதாபுரம் பகுதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். மேலும் வழக்குகள் வாபஸ் பெறுவது என்பது சட்டப்பூர்வமாக தான் நடைபெறும் என்றும், இது குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என கூறினார். பேச்சுவார்த்தை திருப்தியளித்தது என்றும், மாவட்ட நிர்வாகம் பரிவுடன் பேசியதாகவும் போராட்டக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மாவட்ட நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டக்குழு உறுப்பினர்கள், ‌காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள உதயகுமார் உள்ளிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை குறித்து தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர். மதுரை மாவட்ட ஆயர் பீட்டர் பெர்ணாண்டோ ஜூஸ் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் தங்களது உண்ணாவிரதத்தை முடித்து கொண்டனர்.



வியாழன், 22 மார்ச், 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி


மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஏற்று கொள்ளப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்பட 24 நாடுகள் ஒட்டளித்துள்ளன. முடிவில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் நடந்த புலிகள் ஒழிப்பு நடவடிக்கையில் இறுதிக்கட்ட போரில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகவும், இங்கு நடந்த போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா தரப்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் தொடர்பான விவாதங்கள் கடுமையாக நடந்தன. இந்த விவாதம் முடிந்த நிலையில் சற்று முன்பு நடந்த ஓட்டடெடுப்பில் இந்தியா, உள்ளிட்ட 24 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தன. சீனா, ரஷ்யா உள்ளிட்ட 15 நாடுகள் எதிர்த்தன. 8 நாடுகள் வாக்களிக்கவில்லை. 

திங்கள், 19 மார்ச், 2012

கூடங்குளத்தில் போலீஸ்


கூடங்குளத்தில் தொடங்கிவிட்டது தமிழக அரசின் நடவடிக்கைகள். இன்று காலை போலீஸ் படை அங்கு குவிக்கப்பட்டிருந்த நிலையில், கூட‌‌ங்குள‌ம் அணுஉலை‌க்கு எ‌திராக போரா‌டி வ‌ந்த மு‌க்‌‌கிய ‌பிரமுக‌ர்க‌ள் 9 பேரை போ‌லீஸா‌ர் ‌திடீரென கைது செ‌ய்து‌ள்ளது. இதனால் அ‌ங்கு பெரு‌ம் பத‌ற்ற‌ம் ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.
போராட்டக்குழு தலைவர் உதயகுமார் முதலில் கைது செய்யப்படுவார் என ஒரு ஊகம் இருந்தது. ஆனால், முதலில் கைதானவர்களில் அவர் கிடையாது. கைது செய்யப்பட்ட 9 பேரில் வழ‌க்க‌றிஞ‌ர் ‌சிவசு‌ப்‌பிரம‌ணிய‌ன் உள்ளார்.
கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ‌வழ‌க்க‌றிஞ‌ர் ‌சிவசு‌ப்‌பிரம‌‌ணிய‌ன், ஆரம்பத்தில் இருந்தே போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். ‌போராட்டக்காரர்கள் சார்பில் பிரதமரை ச‌ந்‌தி‌த்த குழு‌வி‌ல் இட‌ம் பெ‌‌ற்‌றிரு‌ந்தா‌ர். அதேபோ‌ல் முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதாவை இர‌ண்டு முறை ச‌ந்‌தி‌த்த கு‌ழு‌வி‌லு‌ம் அவ‌ர் இட‌ம் பெ‌ற்‌றிரு‌ந்தா‌ர்.
போராட்டம் தொடர்பாக உதயகுமாருக்கு ஆலோசனைகள் வழங்குவதில் வக்கீல் சிவசுப்ரமணியனின் பங்கு அதிகம் என்கிறார்கள். அதனால்தான் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில், முதல் ரவுண்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, அணுஉலை எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டக்குழு தலைவர் உதயகுமார் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கியுள்ளார்.
இன்று காலையில் குவிக்கப்பட்டிருந்த போலீஸாரைவிட மேலும் அதிக எண்ணிக்கையில் 10 மாவட்டங்களில் இருந்து போலீஸார் கூடங்குளத்துக்கு தருவிக்கப்பட்டுள்ளனர். தற்போது அங்குள்ள போலீஸாரின் எண்ணிக்கை 4,000 அளவில் இருக்கலாம் .
போராட்டக்காரர்கள் எந்த நிமிடத்திலும் வன்முறையில் இறங்கலாம் என்பதால், போலீஸாரும் தயாராக உள்ளனர் .

வெள்ளி, 16 மார்ச், 2012

டெண்டுல்கர்


சச்சின் டெண்டுல்கர் பாவம்.. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் வயதை அடைஞ்சும்.. இன்னும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

அதிலும் அவர் 100 வது ஒரு நாள் சதத்தை அடிக்கப்பட்ட பாடு இருக்கே.. போதும் போதும் என்றாச்சு ரசிகர்களுக்கு.

இதோ.. மேற்கிந்தியாவில் அடிக்கிறார் என்றாங்க.. அப்புறம்.. இங்கிலாந்தோட அடிக்கிறார் என்றாங்க.. அப்புறம் தென்னாபிரிக்காவோட அடிக்கிறார் என்றாங்க.. அப்புறம்.. அவுஸ்திரேலியாவோட அடிக்கிறார் என்றாங்க.. அப்புறம்.. இனவெறி நாடு சிறீலங்காவோட அடிக்கிறார் என்றாங்க.. பாகிஸ்தானோட அடிக்கிறார் என்றாங்க.. கடைசில ஆசியக் கோப்பைப் போட்டியில.. 4 வது லீக் ஆட்டத்தில.. பங்களாதேஷ் அணி போட்டுக் கொடுத்த பந்துகளில ஒரு மாதிரி 'அடிச்சிட்டாரு.                                                          ரொம்ப ஓவரா நீ ஆணியே புடுங்க வேணாம்பா


வியாழன், 1 மார்ச், 2012

கூடங்குளம் பணம்


கூடங்குளம் அணு ஆலை எதிர்ப்பு போராட்டத்துக்கு வெளிநாட்டு பணம் வந்தது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஒன்றான குட் விஷனின் டைரக்டர் மனோ தங்கராஜ், “எமது நிறுவனம், கூடங்குளம் போராட்டத்துக்காக வெளிநாட்டு நிதியுதவி பெறுகிறது என்ற குற்றச்சாட்டு அபாண்டமானது.  கூடங்குளம் திட்டத்துக்கு தனிப்பட்ட முறையில் நான் எதிர்ப்பு தெரிவிப்பது வேறு விஷயம். அதற்கும், நான் டைரக்டராக உள்ள நிறுவனத்துக்கும் தொடர்பு கிடையாதுஎன்று கூறியுள்ளார்.
கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டு நிதியுதவி வந்து பாய்வதை மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது. ஆனால், நிதி எப்படி வந்து சேர்கிறது என்பதில்தான் லேசான குழப்பம் உள்ளதாக தெரிகிறது.
குட் விஷன் நிறுவனத்துக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டு நிதியுதவி ஏதும் கிடைக்கவில்லை. இதை எமது வெளிநாட்டு நிதி வரும் பேங்க் அக்கவுண்டில் இருந்தே உறுதி செய்து கொள்ளலாம்என்பது மனோ தங்கராஜின் கூற்று.
குட் விஷன் நிறுவனம் வெளிநாட்டு நிதியுதவி வந்து சேர்வதற்காக சின்டிகேட் பேங்கில் ஒரு கணக்கு வைத்திருப்பதாக தெரிகிறது. கன்யாகுமரி மாவட்டம் கருங்கல் என்ற இடத்திலுள்ள சின்டிகேட் வங்கிக் கிளையில் இந்த கணக்கு மெயின்டெயின் பண்ணப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து நேரடியாக அந்த வங்கிக் கணக்குக்கு சமீபத்தில் பணம் வரவில்லை என்பது, நிஜம்தான்.
ஆனால், இப்படியான விவகாரங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை, மத்திய ரிசர்வ் பேங்கின் கண்காணிப்பில் உள்ள இதுபோன்ற வங்கிக் கணக்குக்கு யாரும் அனுப்ப மாட்டார்கள். அப்படி வரும் பணம் சுலபமாக ட்ராக்-டவுன் செய்யப்படலாம் என்பதை தெரியாத முட்டாள்கள் அல்ல, வெளியேயிருந்து நிதி அனுப்பும் ஆட்கள்.
தமிழகத்தில் உள்ள எந்த என்.ஜி.ஓ.-வின் வங்கிக் கணக்குக்கும் இந்தப் பணம் நேரடியாக வந்து சேரவில்லை. போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்காக எங்கோஒரிஜினேட் பண்ணிய பணம், ஜேர்மனியில் இயங்கும் என்.ஜி.ஓ. ஒன்றின் ஊடாக கேரளாவில் உள்ள சில என்.ஜி.ஓ.-களுக்கு வருகின்றது.
கேரளாவில் இருந்து நாகர்கோவில் கடந்து கூடங்குளம் வந்து சேர்கிறது!
மத்திய உளவுத்துறைகளிடம் சங்கடத்துக்குரியஇந்த விபரங்கள் நிச்சயம் இருக்கும். இந்த இன்டர்நேஷனல் ரிங்கை ஹேன்டில் செய்வதால் அரசியல் ரீதியான சிக்கல்கள் எழும் என்ற தயக்கம் இருக்கும் என்பது அதைவிட நிச்சயம்.
ஒருவேளை உதயகுமாருக்கும் தெரிந்திருக்குமோ? அவர் கேரள பல்கலைக்கழகத்தில் படித்தவர். அமெரிக்காவில் ஹவாயிலும் இன்டியானாவிலும் 12 ஆண்டுகள் வசித்தவர் என்பதால், இப்படியான விவகாரங்களை அவர் அறிந்திருக்கலாம் அல்லவா?

தமிழக மக்களை ஏமாற்றும் உதயகுமார்


கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு  எதிராக போராடி வரும் போராட்ட குழுவினர் நேற்று தமிழக முதல்வர் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்கள் .  முதல்வருடனான கூட்டத்தை முடித்து திரும்பிய திரு . உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது , கூடங்குளம் அணுமின் நிலையத்தை எரிவாயுவால் இயக்க முடியும் என்றும் , இது போல உலகத்தில் ஏற்க்கனவே நிகழ்ந்து இருப்பதாக 3 மின் நிலையங்களின் பெயரையும் குறிப்பிட்டார் .  இந்த தகவலை ஆராய்ந்து பார்த்தால் , திரு . உதயகுமார் அறிந்தோ / அறியாமலோ தமிழக மக்களையும் , தமிழக முதல்வரையும் ஏமாற்றும் தகவலை சொல்லி உள்ளார் என்பது புலனாகிறது ..
.
இந்த சம்பவங்கள் குறித்து நான் பல பதிவுகள் ஏற்கனவே எழுதி இருந்தாலும் ,  சில பதிவுலக நண்பர்களும் இதை வலியுறுத்தி எழுதுவதால் , இது குறித்து மிகவும் விளக்கமாக எழுத ஆசைப்பட்டதே இந்த பதிவு . பொறுமையுடன் படியுங்கள் .... கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் .

செய்தியாளர்களிடம் திரு . உதயகுமார் பேசும் பொழுது கீழ்க்கண்ட மூன்று அணுமின்  நிலையங்கள் Gas மற்றும் நிலக்கரி  மூலம் இயங்கும் மின் நிலையங்களாக மாற்றப்பட்டு இருப்பதாக கூறினார் . 
  1. அமெரிக்காவில் உள்ள ஷோர்ஹாம் அணுமின் நிலையம்
  2. ஓஹியோ மாகாணம் , மாஸ்கோ என்னும் இடத்தில உள்ள வில்லியம் ஹெச். ஜிம்மர் மின்திட்டம்
  3. மிக்சிகன் மாகாணம் , மிட்லேன்ட் அணுமின் நிலையம்
  எனவே இவற்றின் உண்மை பின்னணி குறித்து விளக்கமாக நாம் காண்போம் .

 அமெரிக்காவில் உள்ள ஷோர்ஹாம் அணுமின் நிலையம் .
ஏப்ரல் 13 , 1965 ம ஆண்டு இந்த மின்திட்டம் துவக்கத்தை குறித்து LILCO ( Long Island Lighting Company ) நிறுவனத்தின் தலைவர் தங்கள் நிறுவனத்தின் பங்குதாரர் கூட்டத்தில் அறிவித்தார் .  அதன் படி நியூயார்க் அருகில் உள்ள ஷோர்ஹாம் என்ற இடத்தில 1973 ம வருடம் தொடங்கப்பட்டு 1984 ம வருடம் கட்டி முடிக்கப்பட்டது  


3 mile தீவு விபத்திற்கு பிறகு , இந்த பகுதி மக்கள் அணுமின் நிலயத்திற்கு எதிராக போராடினார்கள் என்பது உண்மை தான் .  ஆனால் அணுமின் நிலையம் மூடப்படத்தின் உணமையான காரணம் பின்வருமாறு  :

  1. இந்த அணுமின் நிலையத்தின் கட்டுமானம் Nuclear Regulatory Commission and the Atomic Energy Commission போன்றவற்றின் விதிகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை . அதனால் இந்த அணுமின் நிலயத்தின் கட்டுமான தரம் கேள்விக்குறியானது ..... தகவலுக்கு : http://www.eoearth.org/article/Shoreham_Nuclear_Power_Plant 
  2. இந்த அணுமின் நிலையம் அரசால் நேரடியாக கட்டப்படவில்லை . ஒரு தனியார் நிறுவனத்தால் ( தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Long_Island_Lighting_Company ) கட்டப்பட்டது . மேலும் இந்த நிறுவனம் தயாரித்த அவசர கால திட்டம் அரசால் ஏற்றுகொள்ள முடியாததால் இந்த மின் நிலையத்தின் செயல்பாடு அரசால் நிறுத்தப்பட்டது .

 மாத்திரமல்ல இந்த அணுமின் நிலையம் தனியாரால் கட்டப்பட்டதால் ,  இந்த அணுமின் நிலையத்தின் உபகரனகள் ( Turbine  ) போன்றவை வேறு ஒரு அணுமின் நிலையத்தில் ( Davis-Besse Nuclear Power Station ) பயன்படுத்தப்பட்டது . அதாவது அணுமின் நிலையத்தை அப்படியே Gas Fired power station ஆக மாற்றமுடியாது என்பது விளங்குகிறது அல்லவா .... தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு காரணிகளை மேற்கொள்ளாத காரணத்தினால் தான் அந்த அணுமின் நிலையம் மூடப்பட்டது . தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Shoreham_Nuclear_Power_Plant



அணுமின் நிலையத்தின் Power Transmission system மாத்திரம் அப்படியே வைக்கப்பட்டு 2002 ம ஆண்டில் 100 MWe மின்சாரம் தயாரிக்கும் Gas Fired மின் நிலையம் புதிதாக அமைக்கப்பட்டது .  ஏற்கனவே அமைக்கப்பட்ட அணுமின் நிலைய உணகரனங்களை நீக்குவதற்கும் , புதிய Gas Fired மின் நிலையம் அமைப்பதற்கும் 186 மில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டது .  தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Shoreham_Nuclear_Power_Plant

 ஓஹியோ மாகாணம் , மாஸ்கோ என்னும் இடத்தில உள்ள வில்லியம் ஹெச். ஜிம்மர் மின்திட்டம் 

  சின்சினாட்டி gas  & electric நிறுவனத்தால் Ohio மாகாணத்தில் உள்ள மாஸ்கோ என்ற இடத்தில 230 மில்லியன் டாலர் செலவில் அணுமின் நிலையம் கட்டப்பட ஆரம்பித்தது .  இந்த அணுமின் நிலைய திட்டம் 1983 ம வருடம் கைவிடப்பட்டு கூடுதலாக 100 மில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டு கிட்டதட்ட 3 . 4 பில்லியன் டாலர் செலவில் ( 1984 ம வருட கணக்கின் படி ) அனல் மின் நிலையமாக மாற்றப்பட்டது .  ஏன் அப்படி செய்யப்பட்டது என்பதை நாம் காணலாம்





97 சதவீதம் கட்டி முடிக்கப்பட்ட அணுமின் நிலையத்தின் முக்கிய Pipe line யை சோதித்து பார்க்கும் பொழுது மிக மோசமான தரத்துடன் அமைக்கப்பட்டு இருந்ததால் Nuclear Regulatory Commision 2 லட்சம் டாலர் அபராதத்தை சின்சினாட்டி gas  & electric நிறுவனத்தின் மீது விதித்தது .  மேலும் இந்த தனியார் நிறுவனம் முதல் முதலாக அணுமின் நிலையத்தை கட்டியபடியால்  ,  தரம் குறைந்த உபகரனகளையும் , தரம் குறைந்த கட்டுமானத்தையும் கொண்டு இருந்த படியால் , அணுமின் நிலையம் திட்டம் கைவிடப்பட்டது .  இந்த அணுமின் நிலையத்தை அனல் மின் நிலையமாக மாற்ற அணுமின் நிலையத்திற்கு அமைக்கப்பட்ட Cooling tower தவிர மற்ற அனைத்தும் புதிதாக மாற்றப்பட்டது . தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/William_H._Zimmer_Power_Station


 மிக்சிகன் மாகாணம் , மிட்லேன்ட் அணுமின் நிலையம் 

Midland Cogeneration Venture என்ற நிறுவனத்தால் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த அணுமின் நிலையம் ஏன் Gas fired மின் நிலையமாக மாற்றப்பட்டு என்று நாம் பார்த்தால் , அந்த கட்டுமானம் மோசமான தரத்தினால் கட்டப்பட்டது மற்றும் அதன் தரைபகுதி மூழ்கவும் ( கட்டுமானத்தில் இருக்கும் போதே ) தொடங்கி விட்டது .  தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Midland_Cogeneration_Venture . அணுமின் நிலையம் கட்டுவதற்கு செலவழிக்கப் பட்டதை போல இரு மடங்கு செலவழிக்கப்பட்டு ( 500 மில்லியன் டாலர் ) , இந்த அணுமின் நிலையம் , Gas fired மின் நிலையம் ஆகா மாற்றப்பட்டது . தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Midland_Cogeneration_Venture





மேற்க்கண்ட சம்பவங்களை நாம் பார்க்கும் பொழுது , நாம் கவனிக்கவேண்டிய சில விடயங்கள் உள்ளது . அவை .....

  1. மேற்கண்ட அணுமின் நிலையனகள் அனைத்தும் தனியார் கட்டியது .  ஆனால இந்திய அணுமின் நிலயங்கள் அனைத்தும் இந்திய அணுசக்தி கழகத்தால் கட்டப்படுகிறது .
  2. மேற்கண்ட அனைத்து அணுமின் நிலையங்களின் கட்டுமானம் அனைத்தும் தரமற்றவை மற்றும் பாதுகாப்பற்றவை ஆக இருந்ததினால் தான் அவைகள் மாற்றப்பட்டது .  தரமான , மற்றும் பாதுகாப்பான மற்ற அணுமின் நிலையங்கள் ஏன் மாற்றப்படவில்லை ....?  கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு காரணிகள் மத்திய , மாநில குழு வல்லுனர்களால் சான்றளிக்கப்பட்டு இருக்க திரு . உதயகுமார் இப்படி கேட்பது எதற்கோ ...?
  3. மேற்கண்ட மூன்று அணுமின் நிலையங்களும் வேறு நிலையங்களாக மாற்றப்படுவதற்கு ஏறத்தாழ இரு மடங்கு செலவு செய்யப்பட்டுள்ளது . அதாவது அந்த தொழில்நுட்பம் முழுவதும் மாற்றப்பட்டுள்ளது .  ஆனால் திரு . உதயகுமார் அணுமின் நிலையத்தை அப்படியே Gas Fired powed Station ஆக மாற்றமுடியும் என்று எப்படி சொல்லுகிறார் ...?
  4. மேற்கண்ட விடயங்கள் முழுவதும் திரு . உதயகுமாருக்கு தெரியாதா ...? அல்லது வேண்டும் என்றே மக்களை குழப்புகிறாரா ....? முதல்வரையும்  சேர்த்து ...
  5. சமையலுக்கே எரிவாயு ஒழுங்காக கிடைக்காத இந்த சமயத்தில் அண்ணாச்சி உதயகுமார் எரிவாயுவை எங்கிருந்து கொண்டுவருவார் என்பதும் விளங்காத காரியம் தானே ....!

இவைகளை கவனித்து பார்க்கும் பொழுது திரு . உதயகுமார் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும்  முட்டாள்கள் என்று நினைத்து விட்டார் என்றே தோன்றுகிறது ...... தமிழர்கள் முட்டாள்கள் அல்ல என்பதை திரு . உதயகுமார் உணரும் நாள் வரை நானும் காத்திருக்கிறேன்