சாலையில் செல்லும்போது எதிரே பிணம் எடுத்துச் சென்றால் பார்க்கலாமா?
இதன் அடிப்படையும் சுவாரசியமானது. நமக்குத் தெரிந்தவர் யாரேனும் இறந்துவிட்டால், நாம் அந்த மனிதரின் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்லும்போது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு நடந்துசெல்வது வழக்கம். எதிரில் அப்படி ஒரு இறுதி ஊர்வலம் வந்தால், நல்லவேளை இறந்தவர் நமக்கு வேண்டியவர் இல்லை என்று சிறு நிம்மதியும் கொள்ளலாம். ஆக, ஊர்வலத்தின்பின் செல்லவேண்டி வந்தால் நாம் துக்கமாகவும், எதிரிலே வந்தால் சற்று நிம்மதியுடன் இருப்பதும் இயல்பு. இந்த மனநிலையைத்தான் காலப்போக்கில், எதிரே பிணம் வந்தால் அதிர்ஷ்டம் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக