வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

குரங்கணி ஸ்ரீமுத்துமாலை அம்மன்


 குரங்கணி ஸ்ரீமுத்துமாலை அம்மன்




                  எங்கள் ஊர் அம்மன் கோவில்


தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள அழகிய கிராமம் குரங்கணி. இத்தலத்தில்தான் முத்து மாலையம்மன் அருளாட்சி செய்கிறாள். ராவணனுடன் போர் புரிய வானரச் சேனைகள் அணிவகுத்து நின்ற இடமாதலால், இத்தலம் குரங்கணி என்றானது என்கிறார்கள். ராவணன் தன்னைக் கவர்ந்து சென்றபோது, ராமபிரானுக்கு அடையாளம் காட்ட தன் ஆபரணங்களை ஒவ்வொன்றாக எடுத்து வீசினாள் சீதை.
அவற்றில் ஒன்றான முத்துமாலை தாமிரபரணிக்கரையில் விழுந்து ஜோதிப் பிழம்பாய் காட்சியளித்தது. அந்த ஒளி, பார்ப்பவரின் கண்களைக் கூச வைத்தது. அப்போது அங்கு வந்த பனையடியான் என்பவர் முத்து மாலையைக் கண்டார். ஒரு மண் தாழியை எடுத்து மாலையை மூடினார். அந்த மாலை அம்மன் ரூபத்தில் அருள் சுரந்தாள்.
ஒருமுறை, தாமிரபரணி ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது தாழியோடு இந்த முத்துமாலையும் மூழ்கியது. அப்போது இப்பகுதியில் வாழ்ந்த நான்கு சகோதரர்களின் கனவில் அம்மன் தோன்றினாள். எனக்கு இந்த இடத்தில் ஒரு கோயில் கட்டுங்கள். வேண்டும் வரங்களை அருள்வேன்என்றாள். அதன்படி கோயில் எழும்பியது.
இங்கு கருணை வடிவாக அருள் புரிகிறாள் குரங்கணி அம்மன். இடது புறம் நாராயணர், ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகிறார். முத்துமாலை அம்மனுக்கு தென்புறம் பெரிய சுவாமி சந்நிதி உள்ளது. முப்பிடாதி அம்மன், சப்தகன்னிகைகள், பார்வதி அம்மன், உஜ்ஜயினி மாகாளி, பேச்சியம்மன், பிரம்மசக்தி, மாரியம்மன், சந்தன மாரியம்மன் மற்றும் பைரவர், வீரபத்திரர் ஆகியோர் தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருக்கின்றனர்.
விநாயகர், விஸ்வநாதர் விசாலாட்சிக்கு ஒரு சந்நிதி, நவக்கிரஹ சந்நிதி, துர்க்கை அம்மன், பனையடியான் பீடம் மற்றும் பரிவார தேவதைகளும் உள்ளனர். தை மாதம் திருமால் பூஜை நடக்கும் அன்று மதியம் கோயிலில் விழுந்து கும்பிடுதல் நிகழ்ச்சி நடைபெறும்.




அந்த நேரத்தில் வானில் கருடன் வட்டமிடும் அன்று அம்மன் கோவில் கோட்டைக்குள் பக்தர்கள் பொங்கலிட்டு, அன்னைக்குப் படைத்த வாழைக் குலைகளை வீட்டுக்கு எடுத்துச் செல்வார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக