தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழா12 ம் தேதி நடந்தது. இலங்கை மன்னன் ராவணனால் ராமபிரானின் மனைவி சீதாபிராட்டி சிறை எடுத்துச் சென்ற போது தான் செல்லும் பாதை அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக, சீதாபிராட்டி தன்னுடைய முத்துமாலைகளை கழட்டி எறிந்ததாகவும், அந்த முத்துமாலையே முத்துமாலை அம்மன் என்ற அருள்நாயகியாக அனைவரும் பூஜித்துவரும் அன்பு தெய்வமாக ஆனது என்பது இந்த குரங்கணி கோவிலில் வரலாறாகும். இது தவிர மேலும் பல சிறப்புகள் இந்த கோவிலுக்கு உண்டு முத்துமாலை அம்மன் தங்கமுக விசேஷ அலங்காரத்துடன் காட்சியளித்தார்.
இரவு மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல் மற்றும் கயிறு சுற்றி ஆடுதல் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் அடுத்த முக்கிய நிகழ்ச்சியான 8ம் நாள் கொடைவிழா வரும் 19ம் தேதி நடக்கிறது..
இரவு மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல் மற்றும் கயிறு சுற்றி ஆடுதல் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் அடுத்த முக்கிய நிகழ்ச்சியான 8ம் நாள் கொடைவிழா வரும் 19ம் தேதி நடக்கிறது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக