ஏர்-செல் நிறுவனம் மேக்சிஸ் நிறுவனத்திற்கு கைமாறியது தொடர்பாக விசாரிப்பதற்காக சிங்கப்பூரிலிருந்து அழைத்து வரப்பட்ட ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி அதிகாரிகள், சி.பி.ஐ. கோரிய ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளனர்.புதன்கிழமை அவர்கள் வாக்குமூலம் கொடுக்க வந்தபோது, அவர்களிடம் அந்த ஆவணங்கள் இருக்கவில்லை.
தமக்குத் தேவையான ஆவணங்களின் பட்டியலை அவர்களிடம் கொடுத்திருந்தனர் சி.பி.ஐ. அதிகாரிகள். தேவைப்படும் ஆவணங்களை தேடி எடுப்பதற்கு கால அவகாசம் தேவை என்று வங்கித் தரப்பு கூறியிருந்தது.
தயாநிதியின் மிரட்டலின்பேரில் ஏர் செல் நிறுவனத்தைப் பெற்றுக்கொண்ட மேக்ஸிஸ், அந்த நன்றிக் கடனுக்காக சென்னையிலுள்ள சன் டைரக்ட் நிறுவனத்துக்கு பணத்தை வழங்கியது என்பதே சி.பி.ஐ.யின் குற்றச்சாட்டு. சன் டைரக்ட்டுக்கு வழங்கப்பட்ட பணம், அவர்களது வங்கிக் கணக்கு ஒன்றுக்கு வந்தது தொடர்பான ஆவணங்களே இவை.
ஓவர்சீஸ் பன்ட் ட்ரான்ஸ்பர் என்ற வகையில் சன் டைரக்டின் வங்கிக் கணக்குக்கு இந்தப் பணம், சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. பண ட்ரான்ஸ்பருக்கு சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்டஸ்டாண்டர்டு சார்ட்டர்டு பேங்கின் ஆவணங்கள், தயாநிதிக்கு எதிரான குற்றப் பத்திரிகையில் இணைக்கப்படவுள்ளன..
பணப்பரிமாற்றம் தொடர்பாக தேவைப்பட்ட ஆவணங்கள் கையுக்கு வந்துள்ள நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் தயாநிதி மாறனுக்கு எதிரான குற்றப்பத்திரிகை நெ்த நேரத்திலும் தாக்கல் செய்யப்படலாம்.
ஞாயிறு, 17 ஜூலை, 2011
கல்கி போலிச் சாமியார்
கல்கி போலிச் சாமியார்
''கல்கி பகவான் என்று அழைக்கப்படும் விஜயகுமார், 1984-ல் என்னோடு ஆந்திர மாநிலம் குப்பத்தில் ஒரு நடுநிலைப் பள்ளியில் சக ஆசிரியராக இருந்தவர். போதிய வருமானம் இல்லாததால், அதை விட்டுவிட்டு, எல்.ஐ.சி. ஏஜென்ட் ஆனார். அப்போதே அவருக்குப் பண வெறி... முதலில் 'நான் சாமியின் வரம் பெற்றவன்' என்று மக்களிடம் காணிக்கையாகப் பணம் வசூலிக்கத் தொடங்கி னார். அப்புறம் 'நான், விஷ்ணுவின் 10-வது அவதாரமான கல்கி பகவான்' என்று கூற ஆரம்பித்தார். யாரும் அதை நம்பவில்லை. அப்போது இவர், ஒரு புது டெக்னிக்கைக் கையாண்டார். அதாவது, கிராமங்களில் 10-ம் வகுப்பு முடித்த 125 ஆண்கள் மற்றும் 125 பெண்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி மசியவைத்து, அனைவருக்கும் வெள்ளை உடுப்பு கொடுத்து, அக்கம் பக்கக் கிராமங்களுக்கு அனுப்பிவைத்தார். 'விஜயகுமார் நாயுடுவின் மீது கல்கி பகவான் இறங்கி உள்ளார்' என்று பிரசாரம் செய்யவைத்தார். மக்கள், காணிக்கை கொடுக்க முன் வந்தனர். நாளடைவில் இவரே சிலரை ரெடி பண்ணி, 'எனக்கு கேன்சர் குணம் ஆகாமல் இருந்தது... பகவான் தொட்டார், சரியாகிவிட்டது' என்று மேடைகளில் சொல்லவைத்தார்.
அதோடு, ஷில்பா ஷெட்டி, மனிஷா கொய்ராலா போன்ற நடிகைகளை, 'நான் பகவானிடம் வேண்டிக்கொண்ட பிறகுதான் பெரும் வாய்ப்புகள் வாசலுக்கு தேடி வரத் தொடங்கின' என்று லட்சக்கணக்கில் ரூபாய் செலவழித்துப் பேசவைத்து விளம்பரம் தேடினார். இதுதான் விஜயகுமார்... கல்கி பகவான் ஆன கதை!'' என்று ஒரு முன்னோட்டம் கொடுத்தவர் தொடர்ந்தார்.
''இவர், 'நான் உலகத்தையே தீட்சை அடையச் செய்கிறேன். தீட்சைக்கு மூன்று நிலைகள் உள்ளன' என்று கூறி, முதல் நிலைக்கு 5,000 ரூபாயும் இரண்டாம் நிலைக்கு 10,000 ரூபாயும் மூன்றாம் நிலைக்கு 21,000 ரூபாய் என்று தன்னை நாடி வரும் ஒவ்வொருவரிடமும் கறந்துவிடுகிறார். அதுவும் வெளிநாட்டினர் சிக்கிவிட்டால், அவர்களது மொத்தச் சொத்துகளும் அம்போதான்!
கல்கி பகவான் ஆசிரமத்தில் நடக்கும் கஞ்சா, களியாட்டங்கள்பற்றி ஏற்கெனவே உங்கள் பத்திரிகை உட்பட பல பத்திரிகைகளில் விவரமாகச் செய்திகள் வந்தன. இந்தக் களியாட்டங்களை அரங்கேற்றவே, ஒரு ஸ்பெஷல் ஸ்டூடியோவை உருவாக்கி இருக்கிறார். இதன் உள்ளே 25 வயதுக்கும் குறைவான பெண்களை மட்டும் அழைத்து ஸ்பெஷல் தீட்சை தருவார். ஆந்திர மாநில சேனலில் வெளியான அதிர்ச்சிக் காட்சிகள் மிகக் குறைவுதான். ஆசிரமத்தில் நடப்பவை முழுதாக இன்னும் வெளிவரவில்லை.
இவருக்கு 90-களில் வெறும் 43,000 ரூபாய் மட்டுமே வருட வருமானம். ஆனால், இன்று 1,200 கோடி ரூபாய் சொத்து. ஆந்திராவில் மட்டும் 5,000 ஏக்கர், தமிழ்நாடு, கர்நாடகா என அத்தனை மாநிலங்களிலும் கோடிக் கணக்கில் சொத்துகள்... ஆசிரமங்கள். தனது வீட்டின் நீச்சல் குளத்துக்கு ஸ்பெயினில்இருந்து டைல்ஸ் வாங்கி வந்து பதித்து இருக்கிறார். ஒரு சந்நியாசிக்கு இதெல்லாம் எதற்கு? இவரது மகன் கிருஷ்ணாவுக்கு லாஸ்ஏஞ்ஜலீஸில் கம்பெனி... 33 வெளிநாட்டு கார்கள், பெங்களூருவில் ஆயிரம் கோடியில் கட்டுமான பிசினஸ், மருமகளுக்கு 13 கம்பெனிகள்... இவை எல்லாம் எப்படி வந்தன?
மக்களுடைய நிலங்களையும், பணத்தையும் பறித்துக்கொண்டு பகவான் பெயரில் உலா வருவதால், வரிச் சலுகை பெற்று, மும்பையில் உள்ள தனது ஆட்கள் மூலமாகக் கறுப்பு பணத்தை லாஸ்ஏஞ்ஜலீஸில் இருக்கும் மகனுக்கு அனுப்பி, அதை மாற்றிவிடுகிறார். அதோடு, இவரது அந்தரங்க உண்மைகள் எல்லாம் தெரிந்த மேனேஜர்களான பவன், விகாஷ் என்ற இருவரும் மர்மமான முறையில் இறந்தனர். அதெல்லாம் விபத்துகள் என்று கூறி போலீஸார் கேஸை முடித்ததும் இவருடைய 'தாராளம்' காரணமாகத்தான்!
சனி, 16 ஜூலை, 2011
வியாழன், 14 ஜூலை, 2011
குரங்கணி முத்துமாலை அம்மன் ஆனிப்பெருந்திருவிழா
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழா12 ம் தேதி நடந்தது. இலங்கை மன்னன் ராவணனால் ராமபிரானின் மனைவி சீதாபிராட்டி சிறை எடுத்துச் சென்ற போது தான் செல்லும் பாதை அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக, சீதாபிராட்டி தன்னுடைய முத்துமாலைகளை கழட்டி எறிந்ததாகவும், அந்த முத்துமாலையே முத்துமாலை அம்மன் என்ற அருள்நாயகியாக அனைவரும் பூஜித்துவரும் அன்பு தெய்வமாக ஆனது என்பது இந்த குரங்கணி கோவிலில் வரலாறாகும். இது தவிர மேலும் பல சிறப்புகள் இந்த கோவிலுக்கு உண்டு முத்துமாலை அம்மன் தங்கமுக விசேஷ அலங்காரத்துடன் காட்சியளித்தார்.
இரவு மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல் மற்றும் கயிறு சுற்றி ஆடுதல் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் அடுத்த முக்கிய நிகழ்ச்சியான 8ம் நாள் கொடைவிழா வரும் 19ம் தேதி நடக்கிறது..
இரவு மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல் மற்றும் கயிறு சுற்றி ஆடுதல் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் அடுத்த முக்கிய நிகழ்ச்சியான 8ம் நாள் கொடைவிழா வரும் 19ம் தேதி நடக்கிறது..
ஞாயிறு, 10 ஜூலை, 2011
வெள்ளி, 8 ஜூலை, 2011
கெஞ்சினார் தயாநிதி! 30 நாள் அவகாசம் தாருங்கள்
புதுடில்லி, இந்தியா: ராஜினாமா கடிதத்தைத் தனது பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்த கணம்வரை, தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள தயாநிதி மாறன் போராடியதாக தகவல் கிடைத்திருக்கின்றது. பதவிக்காக அவர், வாய்விட்டுக் கெஞ்சும் நிலைவரை சென்றார் என்கின்றன டில்லி வட்டாரங்கள்.
“என்னைப் பதவியிலிருந்து தூக்க விரும்பினால், நானே வெளியேறிவிடுகிறேன். அதற்கு 30 நாட்கள் அவகாசம் தாருங்கள், பிளீஸ்” என்று தயாநிதி மீண்டும் மீண்டும் கேட்டதாகத் தெரிகின்றது.
ஆனால், அவருடைய கெஞ்சல் பலனளிக்காத நிலையில், நேற்று (வியாழக் கிழமை) தனது அமைச்சர் பதவியை இரண்டாவது முறையும் ‘அற்பாயுசில்’ முடித்துக்கொண்டார் தயாநிதி.
கடந்தமுறை அவர் அமைச்சராக இருந்தபோதும், ஐந்து ஆண்டுகள் முழுமையாக பதவியில் இல்லாமல் வெளியேற வேண்டிய துரதிர்ஷ்டசாலியாகவே அவர் இருந்தார்.
“தயாநிதி, 30 நாட்கள் அவகாசம் கேட்டது எதற்காக?” என்ற கேள்வி டில்லி அரசியல் வட்டாரங்களில் சுற்றிவருகின்றது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சி.பி.ஐ. விசாரணைக்குள் தயாநிதி சிக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அது அவருக்கும் தெரியும். அந்த வழக்கிலிருந்து தப்புவதற்கு உடனடியாக அவருக்கு சிவசங்கரனின் தயவு தேவை.
30 நாட்கள் அவகாசத்தில், மத்திய அமைச்சர் பதவியை வைத்து சிவசங்கரனுடன் ஏதாவது டீல் வைக்க தயாநிதி முயற்சிக்க விரும்பினாரா? இந்தக் கேள்வி டில்லியில் பலருக்கு இருக்கிறது!
இந்த 30 நாள் அவகாசத்தைப் பெற தயாநிதி சளைக்காமல் முயற்சித்தார் என்கிறார்கள். பிரதமரிடம் கேட்டுப் பலனில்லாத நிலையில், சோனியாவுடன் பேச முயற்சித்திருக்கிறார். அவரும் இவரைச் சந்திப்பதைத் தட்டிக் கழித்துவிடவே, அகமது படேலிடமும் தனது 30 நாள் அவகாசக் கோரிக்கையை வைத்தார் எனத் தெரிகின்றது.
அகமது படேல்தான், அமைச்சரவை விவகாரங்களில் சோனியாவின் பிரதான ஆலோசகர் என்பது டில்லி அரசியல் வட்டாரங்களில் அனைவருக்கும் தெரியும். அவரும் தயாநிதியின் கோரிக்கையை சோனியா வரை கொண்டுசெல்லத் தயாராக இருக்கவில்லை!
தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன், நேற்று மதியம் கடைசி முறையாக பிரதமரைச் சத்திக்கச் சென்றார். அதுதான் தனது Breaking point என்பது அவருக்குத் தெரியும். அதனால், அரசு வண்டியைத் தவிர்த்துவிட்டு, தனது சொந்த BMW வண்டியில் பிரதமரின் ரேஸ்கோர்ஸ் இல்லத்திற்கு சென்றார்.
இவருக்கு வெறும் 5 நிமிடங்களே ஒதுக்கப்பட்டிருந்தது. தயாநிதியின் கெஞ்சலை மீண்டும் கேட்க விரும்பாத பிரதமர்-
கையை நீட்டினார்! (தயாநிதியின் பாக்கெட்டிலிருந்த கடிதத்துக்காக)
“என்னைப் பதவியிலிருந்து தூக்க விரும்பினால், நானே வெளியேறிவிடுகிறேன். அதற்கு 30 நாட்கள் அவகாசம் தாருங்கள், பிளீஸ்” என்று தயாநிதி மீண்டும் மீண்டும் கேட்டதாகத் தெரிகின்றது.
ஆனால், அவருடைய கெஞ்சல் பலனளிக்காத நிலையில், நேற்று (வியாழக் கிழமை) தனது அமைச்சர் பதவியை இரண்டாவது முறையும் ‘அற்பாயுசில்’ முடித்துக்கொண்டார் தயாநிதி.
கடந்தமுறை அவர் அமைச்சராக இருந்தபோதும், ஐந்து ஆண்டுகள் முழுமையாக பதவியில் இல்லாமல் வெளியேற வேண்டிய துரதிர்ஷ்டசாலியாகவே அவர் இருந்தார்.
“தயாநிதி, 30 நாட்கள் அவகாசம் கேட்டது எதற்காக?” என்ற கேள்வி டில்லி அரசியல் வட்டாரங்களில் சுற்றிவருகின்றது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சி.பி.ஐ. விசாரணைக்குள் தயாநிதி சிக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அது அவருக்கும் தெரியும். அந்த வழக்கிலிருந்து தப்புவதற்கு உடனடியாக அவருக்கு சிவசங்கரனின் தயவு தேவை.
30 நாட்கள் அவகாசத்தில், மத்திய அமைச்சர் பதவியை வைத்து சிவசங்கரனுடன் ஏதாவது டீல் வைக்க தயாநிதி முயற்சிக்க விரும்பினாரா? இந்தக் கேள்வி டில்லியில் பலருக்கு இருக்கிறது!
இந்த 30 நாள் அவகாசத்தைப் பெற தயாநிதி சளைக்காமல் முயற்சித்தார் என்கிறார்கள். பிரதமரிடம் கேட்டுப் பலனில்லாத நிலையில், சோனியாவுடன் பேச முயற்சித்திருக்கிறார். அவரும் இவரைச் சந்திப்பதைத் தட்டிக் கழித்துவிடவே, அகமது படேலிடமும் தனது 30 நாள் அவகாசக் கோரிக்கையை வைத்தார் எனத் தெரிகின்றது.
அகமது படேல்தான், அமைச்சரவை விவகாரங்களில் சோனியாவின் பிரதான ஆலோசகர் என்பது டில்லி அரசியல் வட்டாரங்களில் அனைவருக்கும் தெரியும். அவரும் தயாநிதியின் கோரிக்கையை சோனியா வரை கொண்டுசெல்லத் தயாராக இருக்கவில்லை!
தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன், நேற்று மதியம் கடைசி முறையாக பிரதமரைச் சத்திக்கச் சென்றார். அதுதான் தனது Breaking point என்பது அவருக்குத் தெரியும். அதனால், அரசு வண்டியைத் தவிர்த்துவிட்டு, தனது சொந்த BMW வண்டியில் பிரதமரின் ரேஸ்கோர்ஸ் இல்லத்திற்கு சென்றார்.
இவருக்கு வெறும் 5 நிமிடங்களே ஒதுக்கப்பட்டிருந்தது. தயாநிதியின் கெஞ்சலை மீண்டும் கேட்க விரும்பாத பிரதமர்-
கையை நீட்டினார்! (தயாநிதியின் பாக்கெட்டிலிருந்த கடிதத்துக்காக)
வியாழன், 7 ஜூலை, 2011
தயாநிதி மாறன் ராஜினாமா
மத்திய மந்திரி தயாநிதி மாறன் 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை தொலைத் தொடர்புத்துறை மந்திரியாக இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்த தாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது.
சன் டி.வி. குழும நிறுவனங்கள் ஆதாயம் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகளில் கூறப்பட்டுள்ளது.
ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரன் ஸ்பெக்ட்ரம் உரிமம் கேட்டு விண்ணப்பித்த போது தயாநிதிமாறன் சுமார் 2 ஆண்டுகளாக உரிமம் கொடுக்காமல் இழுத்தடித் தார். இதையடுத்து சிவசங்கரன் ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் குழுமத்துக்கு விற்றார். தயாநிதிமாறன் மிரட்டியதால் தனது நிறுவன பங்குகளை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக சமீபத்தில் சி.பி.ஐ.யிடம் சிவசங்கரன் வாக்குமூலம் அளித்தார்.
இந்த குற்றச்சாட்டுக்களை தயாநிதி மாறன் மறுத்தார். ஆனால் தயாநிதிமாறன் முறைகேடாக நடந்து கொண்டதற்கான ஆதாரங்கள் சிக்கியது. அந்த ஆதாரங்களை பொது நலன் வழக்குகளுக்கான பொது மையம் (சி.பி.ஐ.எல்.) என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.
ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் மலேசியாவின் மேக்சிஸ் குழுமத்துக்கு கைமாறிய சில தினங்களில், அந்த நிறுவனத்துக்கு 14 ஸ்பெக்ட்ரம் உரிமங்களை தயாநிதிமாறன் ஒதுக்கீடு செய்து கொடுத்தார். அதற்கு பிரதிபலனாக ரூ.599.01 கோடியை சன் டி.வி. குழும நிறுவனங்களில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்தது. இந்த தகவல்களை ஏற்கனவே பொது நல வழக்குகளுக்கான பொது மையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று சி.பி.ஐ.யும் தனது 71 பக்க அறிக்கையில் இந்த தகவல்களை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்தது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தயாநிதிமாறன் செய்த முறைகேடுகளை சி.பி.ஐ. மிகத் தெளிவாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பான விசாரணை வளையத்துக்குள் தயாநிதி மாறன் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் சி.பி.ஐ. மூத்த அதிகாரிகள் செய்து வருகிறார்கள். அடுத்தக் கட்டமாக 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கைமாறி இருக்கலாம் என்ற கணக்கெடுப்பு நடந்து வருவதாக சி.பி.ஐ. வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை அடிப்படை யாக வைத்து அடுத்த குற்றப்பத்திரிகையில் தயாநிதி மாறன் பெயர் சேர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.
சி.பி.ஐ.யின் இத்தகைய நடவடிக்கைகளால் தயாநிதி மாறனை மத்திய மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. பா.ஜ.க., இடதுசாரி கட்சிகள் வற்புறுத்தி வருகின்ற போதிலும் தயாநிதி மாறன் பதவி விலகவில்லை.
சி.பி.ஐ. விசாரணை தீவிரமாகும் பட்சத்தில் தயாநிதி மாறன் மத்திய மந்திரியாக இருந்தால், நேர்மையான, முழுமையான விசாரணை நடைபெற முடியாமல் போகலாம். எனவே தயாநிதிமாறன் தார்மீக பொறுப்பு ஏற்று பதவியை விட்டு விலக முன்வரவேண்டும். அவர் பதவி விலகாவிட்டால் பிரதமர் அவரை மந்திரி சபையில் இருந்து நீக்கி ஜனநாயக மாண்பை காக்க வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர்கள் கூறினார்கள்.
தயாநிதி மாறன் விஷயத்தில் தொடர்ந்து மவுனத்தை கடைபிடித்தால் பெரிய அளவில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளன. இது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
எந்த ஒரு பிரச்சினைக்கும் வாயைத் திறந்து பதில் சொல்லாத பிரதமர் மன்மோகன்சிங் சி.பி.ஐ.யின் சரமாரி குற்றச்சாட்டுக்களால் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார். நேற்று காங்கிரஸ் உயர்நிலைக் குழுவை கூட்டி விவாதித்தார். தயாநிதி மாறன் செய்துள்ள முறைகேடுகள் குறித்து ஆதாரங்களுடன் வரும் தகவல்கள் குறித்து சோனியாவுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த விவகாரத்தில் விரைவில் உரிய முடிவு எடுக்குமாறு தி.மு.க.வை கேட்டுக் கொள்வது என காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானித்தனர். அதன்படி தி.மு.க.விடம் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது.
இதற்கிடையே இன்று பகல் 11 மணிக்கு மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தயாநிதிமாறனும் கலந்து கொண்டார். அப்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்து பிரதமர் மன் மோகன்சிங்கிடம் கடிதம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தயாநிதிமாறன் ராஜினாமா கடிதம் எதுவும் கொடுக்கவில்லை. மந்திரிசபை கூட்டம் முடிந்ததும் அவர் ரேஸ் கோர்ஸ் இல்லத்தில் இருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
இன்று மதியம் 1.30 மணி அளவில் தயாநிதி மாறன் திடீரென மீண்டும் பிரதமரை சந்திக்க ரேஸ் கோர்ஸ் இல்லத்துக்கு சென்றார். 1.45 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தார். அவர்கள் இருவரும் சுமார் 5 நிமிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தயாநிதி மாறன் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார்.
அவரது ராஜினாமாவை பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக்கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மத்திய மந்திரி பதவியை இழக்கும் 2-வது நபர் தயாநிதி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மத்திய மந்திரி சபையில் இருந்து தயாநிதி மாறனை நீக்க சம்மதம் தெரிவித்து சோனியா காந்திக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடிதம் எழுதி அனுப்பி உள்ளதாக டெல்லியில் இருந்து வெளியாகும் பயோனீர் என்ற ஆங்கிலப் பத்திரிகையில் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த கடிதத்தை டி.ஆர்.பாலு எம்.பி. இன்று (வியாழன்) சோனியாவிடம் ஒப்படைப்பார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், ராஜாங்க நிதி மந்திரி பழனி மாணிக்கத்தையும் பதவியில் இருந்து நீக்கி விட்டு, டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோரை மந்திரிகள் ஆக்க கருணாநிதி அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்த தகவலில் குறிப்பிட்டுள்ளது.
மந்திரிகளுக்கு என்ன இலாகா வேண்டும் என்று கருணாநிதி குறிப்பிடவில்லை என்றும், ஆனால் டி.கே.எஸ். இளங்கோவனுக்கு தனிப் பொறுப்புடன் கூடிய இலாகா தருமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் அந்த பத்திரிகையில் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் சோனியா காந்திக்கு, கருணாநிதி கடிதம் எழுதி அனுப்பி இருப்பதாக வெளியான தகவலை தி.மு.க. அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.
இந்த நிலையில் தயாநிதி மாறன் தனது வீட்டில் இருந்து சன் டி.வி. (பழைய அலுவலகம்), வரை அனுமதி பெறாமல் தரையைத் தோண்டி கண்ணாடி இழை கேபிள் போட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. மத்திய மந்திரி பதவிக்காக கொடுக்கப்பட்ட அந்த வசதியை தயாநிதி மாறன் சன் டி.வி.க்கு பயன்படும் வகையில் தவறாக பயன்படுத்தியதாக அந்த குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
சனி, 2 ஜூலை, 2011
சன் டிவிக்கு ஆப்பு
அரசு கேபிள் டிவியை செயல்படுத்துவதின் முதல்கட்டமாக கேபிள் டிவி நிறுவனத்தை தன் கட்டுப்பாடில் இயங்கும் உள்துறைக்கு மாற்றியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து அரசு கேபிள் டிவி பக்காவாக செயல்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
அரசு கேபிள் டிவியை இன்னும் 3 மாத காலத்தி்ற்குள் செயல்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா முனைப்பாக உள்ளார். இதன் முதல் கட்டமாக தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இருந்த கேபிள் டிவி நிறுவனத்தை தன் வசமுள்ள உள்துறைக்கு மாற்றியுள்ளார்.
கேபிள் டிவி நாட்டுடமையாக்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கேபிள் டிவியை நாட்டுடமையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. கடந்த அதிமுக ஆட்சியிலேயே கேபிள் டிவியை நாட்டுடமையாக்க முயன்றார். ஆனால் அது முடியாமல் போனது.
எனவே, இம்முறை கேபிள் டிவியை நாட்டுடமையாக்குவதில் முனைப்பாக உள்ளார்.
கடந்த 22-ம் தேதி அரசு கேபிள் டிவியை செயல்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா கேபிள் ஆபரேட்டர்களை சந்தித்தார். அப்போது இன்னும் 3 மாதத்திற்குள் அரசு கேபிள் டிவி செயல்படத் துவங்கும் என்று அவர்களுக்கு வாக்குறுதியளித்தார். அதற்கு கேபிள் ஆபரேட்டர்கள் நன்றி தெரிவித்தனர்.
கேபிள் ஆபரேட்டர்களுக்கு அளித்த வாக்குறுதிபடி அரசு கேபிள் டிவியை 3 மாதத்திற்குள் துவங்க தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதில் முதல்கட்டமாக அரசு கேபிள் டிவி நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டில் உள்ள உள்துறைக்கு மாற்றியுள்ளார்.
இவ்வாறு செய்ததன்மூலம் அரசு கேபி்ள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் தனது நேரடிப் பார்வையில் இருக்கும். மேலும்,அரசு கேபிள் டிவியைத் துவங்குகையில் ஏற்படும் இடையூறுகளை உள்துறையின் கீழ் உள்ள காவல் துறை மூலம் நீக்கி விடலாம் என்று அந்தத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு கேபிள் டிவியை செயல்படுத்துவது குறித்து நேற்று தலைமை செயலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. இதற்கு தலைமைச் செயலாளர் தலைமை வகித்தார்.
கடந்த திமுக ஆட்சியில் தான் அரசு கேபிள் டிவி கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளனர். மேலும் தஞ்சாவூர், கோவை, வேலூர், நெல்லை ஆகிய இடங்களில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டன. இந்த அறைகள் ஒவ்வொன்றும் குறைந்தது ரூ. 100 கோடி செலவில் அமைக்கப்பட்டது.
இவ்வளவு செலவு செய்து அமைத்த கட்டுப்பாட்டு அறைகள் தற்போது இயங்காமல் உள்ளன. இவற்றை இயக்க குறைந்த பட்சம் ஒரு கட்டுப்பாட்டு அறைக்கு ரூ. 100 கோடி வீதம் ரூ. 400 கோடி செலவாகும். இது குறித்து அறிவிப்பு நிதி நிலை அறிக்கையிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (தட்ஸ் தமிழ்)
முதல்வர் அளித்த வாக்குறுதிபடி 3 மாதத்திற்குள் அரசு கேபிள் டிவி செயல்படத் துவங்கும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்தின் மூலம் இனி கட்டண சேனல்கள் உள்பட அனைத்து வகையான சேனல்களையும் மக்கள் மிகக்குறைந்த விலையில் கண்டு களிக்கலாம் என்று கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தெரிவித்தனர்.
அரசு கேபிள் டிவியை இன்னும் 3 மாத காலத்தி்ற்குள் செயல்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா முனைப்பாக உள்ளார். இதன் முதல் கட்டமாக தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இருந்த கேபிள் டிவி நிறுவனத்தை தன் வசமுள்ள உள்துறைக்கு மாற்றியுள்ளார்.
கேபிள் டிவி நாட்டுடமையாக்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கேபிள் டிவியை நாட்டுடமையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. கடந்த அதிமுக ஆட்சியிலேயே கேபிள் டிவியை நாட்டுடமையாக்க முயன்றார். ஆனால் அது முடியாமல் போனது.
எனவே, இம்முறை கேபிள் டிவியை நாட்டுடமையாக்குவதில் முனைப்பாக உள்ளார்.
கடந்த 22-ம் தேதி அரசு கேபிள் டிவியை செயல்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா கேபிள் ஆபரேட்டர்களை சந்தித்தார். அப்போது இன்னும் 3 மாதத்திற்குள் அரசு கேபிள் டிவி செயல்படத் துவங்கும் என்று அவர்களுக்கு வாக்குறுதியளித்தார். அதற்கு கேபிள் ஆபரேட்டர்கள் நன்றி தெரிவித்தனர்.
கேபிள் ஆபரேட்டர்களுக்கு அளித்த வாக்குறுதிபடி அரசு கேபிள் டிவியை 3 மாதத்திற்குள் துவங்க தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதில் முதல்கட்டமாக அரசு கேபிள் டிவி நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டில் உள்ள உள்துறைக்கு மாற்றியுள்ளார்.
இவ்வாறு செய்ததன்மூலம் அரசு கேபி்ள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் தனது நேரடிப் பார்வையில் இருக்கும். மேலும்,அரசு கேபிள் டிவியைத் துவங்குகையில் ஏற்படும் இடையூறுகளை உள்துறையின் கீழ் உள்ள காவல் துறை மூலம் நீக்கி விடலாம் என்று அந்தத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு கேபிள் டிவியை செயல்படுத்துவது குறித்து நேற்று தலைமை செயலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. இதற்கு தலைமைச் செயலாளர் தலைமை வகித்தார்.
கடந்த திமுக ஆட்சியில் தான் அரசு கேபிள் டிவி கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளனர். மேலும் தஞ்சாவூர், கோவை, வேலூர், நெல்லை ஆகிய இடங்களில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டன. இந்த அறைகள் ஒவ்வொன்றும் குறைந்தது ரூ. 100 கோடி செலவில் அமைக்கப்பட்டது.
இவ்வளவு செலவு செய்து அமைத்த கட்டுப்பாட்டு அறைகள் தற்போது இயங்காமல் உள்ளன. இவற்றை இயக்க குறைந்த பட்சம் ஒரு கட்டுப்பாட்டு அறைக்கு ரூ. 100 கோடி வீதம் ரூ. 400 கோடி செலவாகும். இது குறித்து அறிவிப்பு நிதி நிலை அறிக்கையிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (தட்ஸ் தமிழ்)
முதல்வர் அளித்த வாக்குறுதிபடி 3 மாதத்திற்குள் அரசு கேபிள் டிவி செயல்படத் துவங்கும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்தின் மூலம் இனி கட்டண சேனல்கள் உள்பட அனைத்து வகையான சேனல்களையும் மக்கள் மிகக்குறைந்த விலையில் கண்டு களிக்கலாம் என்று கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தெரிவித்தனர்.
இனி எந்த ஒரு தனிப்பட்ட கேபிள் டிவிக்கள் அதிக லாபம் சம்பாதிக்க முடியாமல் முட்டுக்கட்டை இடப்படும் என்பதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)