திங்கள், 4 மே, 2015

                                             அரோகரா என்பது ஏன்



சிவநாமமான ‘ஹர ஹர’ என்பதையே ‘அரோகரோ! வேல் முருகனுக்கு அரோகரா!’ என்று சொல்கிறார்கள். ஏன் தெரியுமா? சூரபத்மனின் கொடுமை தாங்காத தேவர்கள், சிவபெருமானின் உதவியை நாடினர். சிவன் நெற்றிக் கண்ணில் ஆறு தீப்பொறிகளை வெளியிட, அவை சரவணப் பொய்கையை அடைந்து ஆறு குழந்தைகளானது. அவர்களைக் கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதிதேவி ஒரே உருவமாக்கி ‘கந்தன்’ என்று பெயரிட்டாள். தன் சக்தியை ஒன்று திரட்டி வேலாகக் கொடுத்தாள். வேலினால் கந்தன் சூரனை வதம் செய்தார். இதனால் முருகன் ‘அறுமுகச் சிவனார்’ எனப் போற்றப்பட்டார். முருகனுக்கும், ‘ஹர ஹர’ (சிவனே சிவனே) என்ற பதம் உண்டாயிற்று. இதுவே திரிந்து ‘அரோகரா’ ஆயிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக