கடந்த 36 மணி நேரத்தில் 17 குழந்தைகள் இறந்துள்ளதாக கொல்கத்தாவில் உள்ள பிசி ராய் மருத்துவமனை தெரிவித்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள பிசி ராய் மருத்துவமனையில் கடந்த 36 மணி நேரத்தில் அடுத்தடுத்து 17 குழந்தைகள் பரிதாபமாக இறந்துள்ளன. இந்த தகவலை மருத்துவமனை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இன்று காலை அம்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 9 மாத குழந்தை இறந்ததது. இதையடுத்து அந்த குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டனர். மருத்துவர்களின் அஜாக்கிரதையால் தான் குழந்தை இறந்தது என்று கூறி மருத்துவர்களையும் தாக்கினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே மருத்துவமனையில் 36 மணி நேரத்தில் 17 குழந்தைகள் இறந்துள்ளது அப்பகுதி மக்களை கொதிப்படைய வைத்துள்ளது. மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி தான் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக